கீழக்கரை சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சார மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருவதையும்,கடந்த காலத்தில் நாம் இழந்த சமூக விழுமியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சில புரட்சிகர இளைஞர்கள் அனைத்து ஜமாஅத்துக்களுடன் கலந்து பேசி வருவதையும் கீழைமுரசு வாசகர்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.
இந்த முயற்சிகளை தொடர்ந்து, இன்று காலை கீழக்கரை பைத்துல்மாலில் குத்பா கமிட்டியின் கூட்டம் , கமிட்டியின் தலைவர் செ.மு. ஹமீது அப்து காதர் தலைமயில் நடை பெற்றது, கீழக்கரையின் 8 ஜமாஅத்தை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பினர்களாக கீழை புகாரி, கீழை முஜிப், ஹுசைன், கன்மனி அலி, அப்துல் ஹமீது, உட்ட்பட சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக சாதாரன விஷயங்களை மட்டுமே அலசும் இந்த கூட்டத்தில், இன்று அனல் கக்கும் விவாதங்கள் தெறித்தது. சகோ. புஹாரி மற்றும் சகோ. அப்துல் ஹமீது ஆகியோர்கள் நெருப்பு பிழம்பாக மாறி பேசினர்.
குறிப்பாக கீழக்கரையில் அரங்கேற்றப்படும் இஸ்லாத்திற்கு எதிரான, அறுவறுப்பான கலாச்சார சீரழிவுகளின் போக்கு, ஜமாஅத்துக்களின் கையறுபபட்ட நிலை, கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிக்கும் நம் மக்களின் மன மாற்றம், எல்லைமீறி போகும் அனாச்சாரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மானவ சமுதாயத்தை சீரழிக்க புறப்பட்டிருக்கும் சமூக பொறுக்கிகள், அவர்களின் தொழில், சமுதாயத்தில் பதமாய் கலந்து கீழக்கரையின் கலாச்சார மதிப்புக்களை உறிஞ்சி சக்கையாய் துப்பும் நஞ்சுகள், பணத்தால் அவலங்களை மறைக்கும் பரிதாபம், ஆகிய சீர்கேடுகளை பற்றி பேசினார்கள், மேலும், சமீபத்தில் நடைபெற்ற சம்பவஙகளை நம்மை சுற்றி கண்டும் கானாமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்த்தியினருக்கு நாம இந்த கேடுகெட்ட செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கிவிடும் சரித்திரப் பிழையை செய்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளின் சூழ் நிலை உணமையை அறிந்து கொண்டு இதுவரை கீழக்கரை வரலாறு கண்டிராத கீழ்காணும் அதிரடி முடிவு குத்பா கமிட்டி எடுத்து இருக்கிறது.
இனி வரும்காலங்களில் சமூக மதிப்பீடுகளை வலுவிழக்க செய்யும் சம்பவங்கள் ஜமாஅத்துக்களின் மூலமே , தீர்க்கப்படும் எந்த கட்சியோ, இயக்கமோ, தனிநபர்கள் அமைப்போ இந்த் விஷயத்தில் தலையிட அனுமதிக்க முடியாது, இது போன்ற விஷயத்தில் ஜமாத்துக்களின் முடிவே இறுதியானது.
இந்த விஷயங்களை கண்காணிக்க மற்றும் ஆராய “அனைத்து ஜாமாத்துக்கள் கூட்டமைப்பு ’ வழிநடத்துதலின் கீழ் கண்கானிப்பு குழு அமைக்கப்படும், ஓவ்வொரு ஜமாத்துக்களில் இருந்து 3 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதன் தலைவராக “குத்பா கமிட்டியின்” தலைவரே செயல்படுவார்.
மானவர்களை பள்ளி, மற்றும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும், வேன்கள்,ஆட்டோக்கள் ஆகியவை ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஜமாஅத் குழுக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இந்த வாகனங்கள் கொண்டு வரப்படும்.
மேலே சொல்லப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த குழு இனி மாதம் ஒரு முறை கூடி விவாதிக்கும் என கூறப்பட்டிருக்கிறது, ஜமாஅத்துக்களின் இந்த ஒருங்கினைப்புத் திட்டம், அறியாமை உள்ளங்களில் விஷ விதை நட்டு சொகுசாய் காய்பறித்து குசு விடும் பண்டார நாய்களின் வேட்டிக்குள் வேட்டு வச்ச மாதிரி ஆகிடுச்சுன்னு ஊர்ல பேசிக்கிறாங்க.. உண்மைதான் நாங்களும் “கொலை வெறி” லதான் இருக்கிறோம்.





2 comments:
சமூக அக்கறை கொண்ட இந்த தகவலையும் கீழக்கரை வாழ் அனேக மக்களின் கனிவான பார்வைக்கு கீழை டைம்ஸில் இன்று பதிவு செய்கிறோம்.
சமூக அக்கறை கொண்ட இந்த தகவலையும் கீழக்கரை வாழ் அனேக மக்களின் கனிவான பார்வைக்கு கீழை டைம்ஸில் இன்று பதிவு செய்கிறோம்.துள்ளிச் செல்லும் பள்ளிக் குழந்தைகளை... என்ற தலைப்பில்
Post a Comment