கடந்த ஆட்சி கானாமல் போனதற்கு மின் வெட்டும் ஒரு காரனமாக சொல்லப்பட்டது, இந்தா.. ”மே” ல சரியாகிடும் “ ஜூன்” ல சரியாகிடும்னு ஆற்காடு வீராசாமி மக்களின் நெஞ்சில குத்துனாரு, மக்களும் கடந்த தேர்தல்ல அவங்கள ஸ்ட்ராங்கா குத்தி ஓரமா உட்கார வச்சுட்டாங்க, ஆனாலும் ஒரு புன்னியம் செஞ்சாங்க, டைமை சொல்லி கரண்ட கட் பண்ணினாங்க, நகர்புரத்துல மின்வெட்டின் பாதிப்பு அவ்வளவா இல்லை, மற்ற பகுதிகளில 2 ல் இருந்து 4 மனி நேரம் கணக்கா பார்த்து மின் வெட்டு இருந்துச்சு. இப்போ என்ன நடக்குது?
கீழக்கரையில கரண்டு புழக்கம் ஜாஸ்திங்க, 10 வீட்டுக்கு ஒரு வீட்டுல ஏ.சி இருக்கு, 100 க்கு 75 % வீட்டுல ஃப்ரிட்ஜ், மிக்ஸின்னு ஹெவி டூட்டி ஐட்டங்கள் இறைந்து கிடக்குது, கட்டுமானப் பணி எப்பொழுதும் நடந்துக்கிட்டே இருக்கும், ஊரோட கரண்டு தேவைக்கு ஒரு ராட்சத சப் ஸ்டேசன் வச்சா கூட அதில சேமிச்ச கரண்ட நம்ம ஊரு அள்ளி முழுங்கி ஏப்பம் விட்டுடும். நல்ல வேளைங்க… இந்த யூ.பி. எஸ். ஸ கண்டுபுடிச்சானுங்க, அவனுக்கு நோபல் பரிசு மாதிரி ஏதாவது கொடுத்தே ஆகனும், இல்லைன்னா பச்சிளங் குழந்தைகளும், பள்ளிக்கு போற பிள்ளைகளும் நோயாளிகளிம், காத்து இல்லாம தூக்கம்வராதவர்களின் பாடு படு திண்டாட்டம்தான். சரி ஆட்சிதான் மாறிடுச்சு ஏதாவது முண்ணேற்றம் இருக்கும்னு பார்த்தா, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதையா இந்த மின்வாரியமும், ஆட்சியாளர்களும் முதுகில குத்துராங்க…. முன்பாவது சொல்லிட்டு கரண்ட எடுத்தான், இப்ப என்னங்க… சொல்லாமலேயே எடுக்கிறானுங்க, 2 மனி நேரம் 6 மனி நேரமாகிடுச்சு, பேசாமல் கிரைண்டர் , மிக்ஸிக்கு பதிலா இலவசமா அந்த யூ.பி. எஸ் யும், ஒரு எக்ஸைட் பேட்டரியும் வாங்கி கொடுத்தா… அத மாட்டிட்டா கரண்டு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு தெரியாதுல்ல, அப்புறம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்ல பாருங்க.
சரி நம்ம பக்கத்துல்ல கூடங்குளம் இருக்கு அனு உலை செயல்பட்டுச்சுன்னா கரண்டு 24 மனி நேரமும் அருவியா கொட்டும்னு சொல்றங்கன்னு பார்த்தா அங்க கூடுற கூட்டத்தையும், எழுச்சியையும் பார்த்தால், நம்ம தலைமுறைல அது வராது போல இருக்கு, அத விடுங்க, கீழக்கரைல 6 மனி நேர மின் வெட்டை இன்ஸ்டால்மெண்ட் முறையில் எடுத்து மக்கள் முதுகுல குத்துற மின்வாரியத்தை என்ன சொல்வது, மின்வெட்டு நம்ம ஊருக்கு ஒரு சாபக்கேடாகவே இருக்கு, எங்க தப்பு நடக்குது ? மிச்சம் புடிக்கிற 4 மனி நேர கரண்டை வச்சு எவன் தாலிய அறுக்கப் போறாங்க? அய்யா நத்தம் விஸ்வனாதன் தலையிட்டு ஏதாவது செஞ்சாத்தான் உண்டு, கீழக்கரை மின்வெட்டு சாபக்கேட்டுக்கு விமோச்சனம் கிடைக்குமா? இதுதான் சாதாரன கீழக்கரைவாசியின் குழப்பமான கேள்வியா இருக்கு .






2 comments:
december le 2 mani neram thaan current pochaam oorle..
appo ella maasamum decembera iruntha nalla irukume..
ella EB kaaranum decemberle mela theru pakkathule suththitu irunthaanuvalaam..
correcta sonna nanba..
Post a Comment