Subscribe:

Thursday, 20 September 2012

இஸ்லாமியர்களின் கொந்தளிப்பின் உச்சத்தை அமெரிக்கா அளவிட நினைக்கிறதா?

முஸ்லீம் உலகினை கொந்தளிக்க வைத்த கேவல திரைப்படத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசுக்கும், யூ ட்யூப் ஊடகத்தினை விலைக்கு வாங்கிய கூகுள் இனைய நிறுவனத்துக்கும் முஸ்லீம்களின் உணர்ச்சிகளை மொத்தமாக சீண்டிப் பார்க்கும் அபாயகரமான ஆவல் வந்து விட்டது. இதற்கான காரனம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன் எதுவுமே இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

 எது எப்படி இருப்பினும், இவ்வுலகில் வாழ்ந்த ஒரு மகத்தான மாமனிதனும் , உலக இஸ்லாமியர்கள் தம் இதயத்தில் சுமந்து வாழும்  அருமை நாயகத்தின் மீது  இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு சுமத்தப்பட்டு, கையறு நிலையில் மகா மோசமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இஸ்லாத்திற்கும், எம் பெருமானார் அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் மீதும் வாறி இறைக்கப்பட்ட அவதூறு  கருத்துக்களையும், விஷம பிரச்சாரங்ளையும் இஸ்லாத்தின் எதிரிகளால் மனம் போன போக்கில் கட்டவிழ்த்து விடுவது ஒன்றும் புதிதல்ல.
 ஆனால் இது அளவு கடந்தது. அறிவீனம் கொண்டது.
 
எல்லையில்லா அபத்தங்களை  திரைப்பட வடிவில்  வெளியிட்ட இஸ்ரேலிய குள்ள நரிகளும், எகிப்தில் வாழும் இஸ்லாமிய எதிரிகளும் உள்ளும் புறமும் ஆப்படிக்கப்பட்டு வண்டி ஏற்றப்படவேன்டிய மலக் கழிவுகள். உலக இஸ்லாமிய  நாடுகளின் எரிசக்தி்யினைனை முழுதும் உறிந்து  ஆணந்தமாய் ஏப்பம் விட்டு வாய் துடைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடியும், அவதூறு வீடியோ க்ளிப் என்ற மலத்தினை தன் தலையில் வைத்துக் கொண்டு துடைக்க மறுக்கும்   கொழுப்பெடுத்த கூகுளின் செயலும் மிகப் பெரும் சதிக்கு  வலை விரித்து எதற்காகவோ ஆதாயம் தேட முற்படுவது போல் தோன்றுவதாக உலக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இஸ்லாமியர்களின் சென்சிட்டிவ் ஏரியாவில் கை வைப்பதாக என்னி எம் பெருமானாரை கொச்சை படுத்திய அந்த இழிபிறவிகளின் நரகல்களுக்கு யூ ட்யூப் கொடுக்கும் முக்கியத்துவத்துவமும் புக்ழிடம் கொடுத்து, கைது செய்ய மறுக்கும் அமெரிக்க அரசும்  உலக இஸ்லாமியர்களையும், இறைதூதரையும்  நேரடியாகவே கேவலப்படுத்தி உலக இஸ்லாமிய சமுதாயத்திடம்  மல்லுக்கட்டி நீயா? நானா? பார்க்க கிளம்பி விட்டதாகவே தோண்றுகிறது, இந்த நீசச் செயலுக்கான விலையினை அனுபவிக்கவும், ருசிபார்க்கவும் நேரம் வந்துவிட்டதாகவே பலர் கருதுகின்றனர்.
 
இறதூதரின் வரலாறு என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த  கற்பனைகள் அனைத்தும் கடந்த காலங்களில் இஸ்லாமிய துவேசிகளினால் மனம் போன போக்கில் , கஞ்சா போதையின் உக்கிரத்தில், நிலைதடுமாறி புணயப்பட்ட போலிக் கதைகள், இவைகள் பார்ஸி மொழியிலும், உருது மொழியிலும் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை. இது தடை செய்யப்பட்ட கற்பனை கதை. இதனை வைத்து ஒரு நாய் புளுகு விட்ட திரைக்கதையை அங்கீகரிக்க துடிக்கும் அமெரிக்காவின் செயல் காலத்தின் கோலமா அல்லது உலகின் அவலமா? நாம் அறியோம்.
 
என்ன விளக்கமளித்தாலும் தனது  புறம்போக்கு கொள்கையினை  நிறைவேற்ற முயலும் இஸ்ரேலிய மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளின்  சமூகவிரோத புளுகு மூட்டைகள் கரை போய் சேராது,  திரும்பும் எதிர் காற்றில் இவர்கள் கரைந்து போவார்கள்  என்பது தின்னம் . அல்லா மிகப் பெரியவன்.