
மெல்லக் கொல்லும் விஷமாய் மாறிவரும் கலாச்சார சீரழிவினை நாம் ஈஸியாக எடுத்துக் கொள்ள பழகி ரெம்ப காலமாகி விட்டது, நமது முண்ணோர்கள் கால காலமாய் பாதுகாத்துவந்த நம் கலாச்சார, பண்பாடுகளை காற்றிலே பறக்கவிட்ட சமூகமாக நாம் வாழ்கிறோம், சிதைக்கப்பட்ட இந்த நம் கலாச்சாரம் மீள்பெறுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகி விட்டது, ஒரு சமூகத்தின் வீழ்ச்சி என்பது அந்த சமூகத்தின் கலாச்சார சீரழிவின் உச்சதில் இருக்கிறது, ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டினை மீறி வரும் சமீபத்திய சம்பவங்கள் பத்திரிக்கை செய்திகளாய் நம் சமூகத்தை கேவலப்படுத்தி வருவதை காண்கிறோம், முத்துப்பேட்டையிலும், காயல்பட்டினத்திலும் இத்தகைய பஞ்சாயத்துக்கள் ஜமா அத்துக்குள்ளேயே செட்டில் செய்யப்படும் பொழுது நம்மால் ஏன் முடிய வில்லை?
வீழ்ச்சி அடைந்து வரும் நமது பண்டைய கலாச்சார மதிப்பினை நிலை கொள்ள வைக்கும் முகமாக புரட்சிகர திட்டத்துடன் சில இளைஞர்கள் அனைத்து ஜமா அத்துகளுடனும் ஆலோசித்து வருகிறார்கள், த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. முஸ்லீம் லீக், கே.எம்.எஸ் போன்ற இயக்கங்கள் ஒன்றாய் இனைந்து ஜமாஅத்துக்களுடன் பேசிவருகிறார்கள், குறிப்பாக, முன்னள் த.மு,மு,க மாவட்ட பொருளாளர் முஜீப், முன்னாள் த.மு.மு.க நகர தலைவர் முஹம்மது ஹூசைன், கண்மனி அலி, சேட்டு, சாலை தெரு சீனி மற்றும் புகாரி ஆகியோர் இதில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
வீழ்ச்சி அடைந்து வரும் நமது பண்டைய கலாச்சார மதிப்பினை நிலை கொள்ள வைக்கும் முகமாக புரட்சிகர திட்டத்துடன் சில இளைஞர்கள் அனைத்து ஜமா அத்துகளுடனும் ஆலோசித்து வருகிறார்கள், த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. முஸ்லீம் லீக், கே.எம்.எஸ் போன்ற இயக்கங்கள் ஒன்றாய் இனைந்து ஜமாஅத்துக்களுடன் பேசிவருகிறார்கள், குறிப்பாக, முன்னள் த.மு,மு,க மாவட்ட பொருளாளர் முஜீப், முன்னாள் த.மு.மு.க நகர தலைவர் முஹம்மது ஹூசைன், கண்மனி அலி, சேட்டு, சாலை தெரு சீனி மற்றும் புகாரி ஆகியோர் இதில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
நமது முன்னோர்களால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்டு வந்த நம் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்து வரும் நம் சந்ததிக்கும் பேணிக்காத்து வழங்க கீழக்கரை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.





1 comment:
WATS UPDATING ABOUT THIS NEWS
Post a Comment