Featured Posts
Sunday 9 June 2013
கீழக்கரையில் சுருட்டப்படும் கோடிகள் - சுகபோகத்தில் கொழிக்கும் மக்கள் பிரதிநிதிகள்…
Thursday 20 September 2012
இஸ்லாமியர்களின் கொந்தளிப்பின் உச்சத்தை அமெரிக்கா அளவிட நினைக்கிறதா?
எது எப்படி இருப்பினும், இவ்வுலகில் வாழ்ந்த ஒரு மகத்தான மாமனிதனும் , உலக இஸ்லாமியர்கள் தம் இதயத்தில் சுமந்து வாழும் அருமை நாயகத்தின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு சுமத்தப்பட்டு, கையறு நிலையில் மகா மோசமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இஸ்லாத்திற்கும், எம் பெருமானார் அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் மீதும் வாறி இறைக்கப்பட்ட அவதூறு கருத்துக்களையும், விஷம பிரச்சாரங்ளையும் இஸ்லாத்தின் எதிரிகளால் மனம் போன போக்கில் கட்டவிழ்த்து விடுவது ஒன்றும் புதிதல்ல.
இஸ்லாமியர்களின் சென்சிட்டிவ் ஏரியாவில் கை வைப்பதாக என்னி எம் பெருமானாரை கொச்சை படுத்திய அந்த இழிபிறவிகளின் நரகல்களுக்கு யூ ட்யூப் கொடுக்கும் முக்கியத்துவத்துவமும் புக்ழிடம் கொடுத்து, கைது செய்ய மறுக்கும் அமெரிக்க அரசும் உலக இஸ்லாமியர்களையும், இறைதூதரையும் நேரடியாகவே கேவலப்படுத்தி உலக இஸ்லாமிய சமுதாயத்திடம் மல்லுக்கட்டி நீயா? நானா? பார்க்க கிளம்பி விட்டதாகவே தோண்றுகிறது, இந்த நீசச் செயலுக்கான விலையினை அனுபவிக்கவும், ருசிபார்க்கவும் நேரம் வந்துவிட்டதாகவே பலர் கருதுகின்றனர்.
Saturday 25 February 2012
கீழக்கரையை பதறடித்த விஷ ஊசி கொலைகள்!
40 ஆண்டுகள் கடந்த பின்னும், இன்று நினைத்தாலும் முதுகெலும்பை சில்லிட வைக்கும், 1970 க்கும் 1972 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த விஷ ஊசிக் கொலைகள் பற்றிய ஒரு பதிவுதான் இது. 9 பேர் அடங்கிய கொடிய கொலைகார கும்பல் சென்னையில் ஏழு தங்க வியாபாரிகளையும் , ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களையும் கடத்திச் சென்று, கொன்று 7 லட்சம் ருபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பனத்தினை கொள்ளையிட்ட வரலாறுதான் இது..
கீழக்கரையை சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் கொலைசெய்யப்பட்டதால் , அந்த காலகட்டத்தில் கீழக்கரையே பெரும் பீதிக்குள்ளானது,. எல்லோரும் அறிந்த இந்த சம்பவத்தினை இந்த தலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதே நம் கட்டுரையின் நோக்கம். மறைந்த முன்னாள் தமிழக ஐ.ஜி. திரு அருள் அவர்கள் இந்த சம்பவத்தினை பத்திரிக்கைகள் விவரித்த செய்திகளின் குறிப்பின் அடிப்படையில் இதனை தொகுத்திருக்கிறோம்
1972, அக்டோபர் 24 ஆம் தேதி, சென்னை ப்ராட்வே லாட்ஜில் தங்கி இருந்த கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த 38 வயதான தைக்கா தம்பி திடீரென மாயமானார் , தைக்கத் தம்பி அப்பொழுது தன்னிடம் 10,000/- ரூபாய் வைத்திருந்தார். அதை தொடர்ந்து கவலையுற்ற அவரது மாமனார் செய்யது அஹ்மது கபீர் , சென்னை ஏழு கினறு காவல் நிலையத்தில் மருமகனை கானவில்லை என புகார் மனு கொடுத்தார். போலீஸ் விசாரணையில் துப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. இவரின் இந்த மனுவே இந்த தொடர் கொலைகளின் முடிச்சு அவிழ்வதவதற்கான தொடக்கமானது., இந்த வழக்கு 1973 ஆணடு ஜனவரி வாக்கில் சிபிசிஐடியின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது..
தைக்கத் தம்பி காணாமல் போன வழக்கை விசாரித்த சிபிசிஐடிக்கு விரைவிலேயே துப்பு கிடைத்து விட்டது., கீழக்கரையை சேர்ந்த முகமது தம்பி என்பவர் தைக்காத் தம்பியுடன் அதிகமாகச் சுற்றி வந்ததாக போலிஸுக்கு தகவல் கிடைத்தது. , கீழக்கரை சென்று முகமது தம்பியை போலிஸார் விசாரித்தார்கள். விசாரனையில் முகம்மது தம்பி கொடுத்த தகவல் என்னெவெனில் ”தைக்கா தம்பியும் நானும் நன்பர்கள், 1972 ஆம் ஆண்டு அக்டோபரில் காதர் என்ற மற்றொரு நன்பர் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி மற்றும் அவருடன் வந்த உதவியாளரிடமும் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், அவர்கள் தன்னிடம் “ தங்க கடத்தலில்” ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டினால் தக்க சன்மானம் தருவதாக உறுதியாளித்த்தாகவும்” தான் செய்து வரும் சங்கு மற்றும் சிப்பிகள் வியாபாரத்தில் சரியான வருமானம் இல்லாத்தால், பனத்தாசையால் தனது நன்பர் தைக்காத் தம்பி 1972 அக்டோபர் கடைசி வாரத்தில் பெங்களூருக்கு தங்கம் கொன்று செல்வதை அறிந்து, காதரை அழைத்துக் கொண்டு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நின்றிருந்த தைக்கா தம்பியை அடையாளம் காட்டியதாகவும், அப்பொழுதே தான் அவரை கடைசியாக பார்த்த்தாகவும் கூறினார்.
அதன் பின் போலீசுக்கு இந்த போலி கஸ்டம்ஸ் அதிகாரிகளை கண்டுபிடிப்பதில் பெரிய சிரம்ம் ஏற்படவில்லை, முதலில் மாட்டியவன் வைத்தீஸ்வரன் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவன் சென்னை ஜார்ஜ் டவுனில் மருந்துக்கடை நடத்தி வந்தான். அவன் மருந்துகள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் நன்கு அறிந்தவன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர், நடிகைகளுக்கு அவன் போதை மருந்துகளை சப்ளை செய்து வந்தான். வைத்தீஸ்வரனின் நண்பன் தாவுத். வெளிநாடுகளிலிருந்து கைக்கடிகாரங்களைக் கடத்தி விற்பதுதான் இவன் தொழில். இந்நிலையில், வைத்தீஸ்வரனுக்கு ஒரு சமயம் பண நெருக்கடி ஏற்பட தன் நண்பன் தாவுத்தை அவன் தொடர்பு கொண்டான். தாவுத் ஒரு யோசனை கூறினான். பலர் சட்ட விரோதமாகக் கள்ளக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள், கணக்கில் வராத கருப்பு பணத்தை வைத்திருக்கிறார்கள். நாம் அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்க முடிவு செய்யப்படுகிறது.
வைத்தீஸ்வரனுக்கு இந்த யோசனைப் பிடித்திருந்தது. செயலில் இறங்கினார்கள்.இருவர் மட்டும் செய்து முடிக்கும் காரியம் இல்லை. நம்பத் தகுந்த கூட்டாளிகள் தேவைப்பட்டனர். பார்த்தசாரதி, வேணுகோபால், அயுப்கான், கண்ணன் ஆகிய நண்பர்களுடன் பேசி, பண ஆசை காட்டி அவர்களையும் தன் கூட்டத்தில் சேர்த்தான் வைத்தீஸ்வரன். அவர்கள் அனைவரும் போலி சுங்கத் துறை அதிகாரிகளாக மாறினர். ஆனால் அவர்களுக்கு கள்ளக் கடத்தல்காரர்களைப் பற்றியும் ஹவாலாவில் ஈடுபடுபவர்கள் பற்றியும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றியும் தகவல் கொடுக்க வேண்டும் அல்லவா? இந்த வேலையைச் செய்ய பிராட்வே ஹோட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்த தன் நண்பன் ஜபருல்லாவை நாடினான் அயுப்கான். ஜாப்பருல்லாவுக்குத் துணையாக பிராட்வே ஹோட்டலில் வேலை பார்த்த அவனுடைய நண்பன் மஜீத்தும் சேர்ந்துகொண்டானர்.
முதலில் சிக்கியது வடிவுள்ளான் செட்டியார். மலேசியாவில் வியாபாரம். தன்னுடய ஹவாலா பரிவர்த்தனையை முன்னிட்டு ஹோட்டல் பிராட்வேயில் தங்கியிருந்தார். ரொக்கமாக 1,50,000/- கையில் வைத்திருந்தார். 1970களில் அது மிகப் பெரிய தொகை. மஜீத்தும் ஜாப்பருல்லாவும் சரியான சமயத்தில் தகவல் கொடுத்தனர். போலி சுங்கத் துறை அதிகாரிகள் ஹோட்டலின் உள்ளே நுழைந்தார்கள். செட்டியாரை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கவேண்டும் என்று கூறி அவரை ஒரு டாக்ஸியில் ஏற்றினார்கள். டாக்ஸியை ஓட்டியவன் கோபால். இவனும் வைத்தீஸ்வரன் கூட்டத்தைச் சேர்ந்தவன். டாக்ஸி புறப்பட்டது. வைத்தீஸ்வரன் மருந்துக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்ட தூக்க மாத்திரைகளைச் செட்டியார் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்தான. நான் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தேன் என்று செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.செட்டியார் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநினைவை இழந்தார். செட்டியாரிடமிருந்து அவர் கொண்டுவந்த ரூபாய் 1,50,000/- கொள்ளை அடிக்கப்பட்டது. அவரது கையிலிருந்த கைக்கடிகாரம் எடுக்கப்பட்டது. செங்கல்பட்டுக்கு அருகாமையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரிலிருந்து செட்டியார் தள்ளிவிடப்பட்டார்.
புதருக்கடியில் செட்டியார் பரிதமாக விழுந்து கிடந்தார். கிராமவாசிகள் அவரைச் செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செட்டியாருக்கு நினைவு திரும்பவில்லை. இரண்டு நாள்கள் கழிந்து அவர் இறந்துவிட்டார். செங்கல்பட்டு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. செட்டியாரின் சட்டை காலரிலிருந்த லேபிளின் அடையாளத்தை வைத்து அவருடைய வசிப்பிடத்தை கண்டுபிடித்தனர். ஆனால் போலீசாரால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளை அடித்த பணத்தில் வைத்தீஸ்வரன், பார்த்தசாரதி, வேணுகோபால், அயுப்கான் ஆளுக்கு தலா 30,000/- ரூபாய் எடுத்துக் கொண்டனர். மீது தொகையை தாவுத், மஜீத் மற்றும் கோபால் ஆகிய மூவரும் பங்கு போட்டுக் கொண்டனர். முதல் முயற்சியிலேயே வெற்றியையும், அதிகப் பணத்தையும் ருசி பார்த்த வைத்தீஸ்வரன் கும்பல் இன்னுமொரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது. .
இவர்களிடம் இரண்டாவதாக சிக்கியவர் ஷாஹுல் ஹமிது. மலேசியாவில் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். 1971ஆம் ஆண்டு தன்னுடைய சுற்றத்தார்களைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார். கையிருப்பில் 55,000/- வைத்திருந்தார். ஷாஹுல் ஹமீதின் போதாத வேளை,அவரும் செட்டியார் தங்கிய அதே ஹோட்டலில் தங்கினார். உடனடியாக தகவல் சென்றது. போலி சுங்கத் துறை அதிகாரிகள் ஷாஹுல் ஹமீதை வழிமறித்தார்கள். அவரை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு, ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஏசி அறை எடுத்து அங்கு தங்க வைத்தனர். பின்னர் அவருக்கு உண்மையை வெளிப்படுத்தும் பெத்தடின் ஊசி போடுவதாகக் கூறி அதிக அளவில் செலுத்தினார்கள். சுய நினைவை இழந்தார் ஷாஹுல் ஹமீத். அவரை ஒரு காரில் ஏற்றி ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரிப்பட்டு என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். காரை ஓட்டிச் சென்றவன் லஷ்மணன். இவனும் வைத்தீஸ்வரன் கும்பலைச் சேர்ந்தவன். ஷாஹுல் ஹமீதிடமிருந்த பணத்தையும் பொருள்களையும் எடுத்துக்கொண்டு, அவர் உடலை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர். அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று மற்றவர்கள் நினைப்பதற்காக.
இரண்டாவது முறையும் வெற்றி. இதனைக் கொண்டாட முடிவெடுத்தார்கள். விருப்பப்படி செலவழித்தார்கள். உல்லாசமாக வளைய வந்தார்கள். கொள்ளை கும்பலைச் சேர்ந்த வேணுகோபால் திடீர் பணக்காரன் ஆனதைக் கவனித்த அவனுடைய நண்பன் தக்ஷிணாமூர்த்தி கவனித்துவிட்டான். சுங்க இலாகாவுக்குத் தகவல் அளிக்கும் வேலையை ரகசியமாகச் செய்து வருபவன் என்பதால் தன் நண்பனைப் பற்றியும் அவன் தகவல் கொடுத்தான். அவன் கொடுத்த தகவலின் பேரில் சுங்க இலாக்காவினர் வேணுகோபாலின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அவர்களால் கள்ளக் கடத்தல் பொருட்கள் எதனையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய முடியவில்லை. ஆனால், வடிவுள்ளான் செட்டியார் வைத்தீஸ்வரன் கும்பலுக்காக எழுதிக் கொடுத்த கடிதம் சிக்கியது. ஆனால் அதை அவர்கள் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தக்ஷிணாமூர்த்தியால் தனக்கு ஏற்பட்ட தொல்லைகளைத் தன் கும்பலிடம் தெரிவித்தான் வேணுகோபால். திட்டம் தயாரானது. பெங்களூருக்கு ஓர் உல்லாசப் பயணம் போய் வரலாம் என்று தக்ஷிணாமூர்த்தியை நயவஞ்சகமாக அழைத்தான் வேணுகோபால். அவனும் தனக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் சம்மதித்தான். கார் பெங்களூர் புறப்பட்டது. காரை ஓட்டியது பார்த்தசாரதி. அந்தக் காரை மற்றொரு காரும் பின் தொடர்ந்தது. அதில் லஷ்மணன், அயுப் கான் மற்றும் கோபால் பயணம் செய்தார்கள். ஓரிடத்தில் தக்ஷிணாமூர்த்தி, வேணுகோபால் மற்றும் பார்த்தசாரதியால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். தக்ஷிணாமூர்த்தியின் உடல் காரிலிருந்து இறக்கப்பட்டு, சித்தூருக்கு செல்லும் வழியில் ஒரு பாலத்தின் அடியில் கொண்டு செல்லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்டது.
தக்ஷிணாமூர்த்தியின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் துப்பு ஒன்றும் துலக்கப்படவில்லை.
இதற்கிடையில் அயுப்கானுக்கு காதர் என்பவனின் தொடர்பு கிடைத்தது. காதரை வேணுகோபால் மற்றும் பார்த்தசாரதியிடம் அறிமுகப்படுத்தினான். அவர்கள் சுங்க இலாக்கா அதிகாரிகள் என்றும் அவர்களுக்கு உளவுத் தகவல் கொடுத்தால் சன்மானம் உண்டு என்றும் வலை விரித்தான். அது உண்மைதான் என்று நம்பிய காதர், தனது முதல் உளவுத் தகவலை அவர்களிடம் தெரிவித்தான். காயல்பட்டினத்தைச் சேர்ந்த புகாரி தம்பி. விஷ ஊசி கும்பல் காதருக்கு நாள் குறித்தது. ஒரு நாள், புகாரி தம்பி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். வழிமறித்த கும்பல், வழக்கமான பல்லவியைப் பாடி புகாரியை காரில் அழைத்துச் சென்றது. வழக்கம் போல் ஊசி போட்டு, கழுத்தை நெரித்து கொன்று போட்டார்கள். பிறகு அவரிடம் இருந்த 55 ஆயிரத்தை கொள்ளையடித்து., அவரின் உடல் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வீசியெறியப்பட்டது. தகவல் கொடுத்து உதவிய காதருக்கு 10,000/- ரூபாய் வழங்கப்பட்டது.. வெகுமதி பெற்ற காதருக்கு ஒரே சந்தோஷம்! தனக்குக் கிடைத்த அத்தனை தகவல்களையும் அவன் விஷ ஊசி கும்பலுக்கு எடுத்துச் சென்றான்.
காயல்பட்டினத்தை சேர்ந்த இலங்கையில் தொழில் புரியும் சதக் இப்ராஹிமை சென்னை எக்மோர் பஸ் நிலையத்தில் வைத்து கட்த்தி, கொன்று அவரிடம் இருந்த 60 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட்து, பின் அவர் உடல் பழமனேறி மலை பகுதியில் வீசப்பட்ட்து..
அடுத்து சிங்கப்பூரில் இருந்து சம்பாதித்து விட்டு திரும்பிய காரைக்காலை சேர்ந்த முகமது சாலிக் நாகப்பட்டினம் செல்ல காத்திருந்தவரை அதே பானியில் கட்த்தி கொன்று அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டு, அவரின் உடலை ஆந்திராவின் புத்தலாபேட்டை பகுதியில் வீசப்பட்ட்து
காதரின் ஒவ்வொரு தகவலும் கொலையில் முடிந்தது. ஒவ்வொன்றுக்கும் சன்மானம்.இதன் தொடர்ச்சியாகத்தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த தைக்கத் தம்பி பற்றிய தகவலையும் காதர்தான் கொடுத்தான். தைக்கத் தம்பி தங்கம் கடத்துகிறார் என்பதுதான் காதர் கொடுத்த தகவல். விஷ ஊசி கும்பல் தைக்கத் தம்பியை பெங்களூரு வரை தொடர்ந்து சென்றது, கன்ன்ன் தைக்கா தம்பியை நிழலாக தொடர்ந்தான். மற்றவர்கள் பெங்களூருக்கு காரில் பயனம் செய்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்த பின் அங்கு அவர் ஒரு பேருந்தில் ஏறும் தருவாயில், வழிமறித்து, கடத்தி, ஊசி போட்டு, கொன்று, 23 தங்க கட்டிகளையும் பணத்தையும் கொள்ளை அடித்தார்கள். தைக்கத் தம்பியின் உடல் வெங்கடகிரி மலைப் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் வீசப்பட்டது..
காதர் மூலமாக போலீஸ் விஷ ஊசி கும்பலின் முக்கிய நபர்களைப் பிடித்தது. வேணுகோபால் நீதிமன்றத்தில் சரணடைந்தான். அவன் அப்ரூவராக மாறி போலீஸுக்கு வாக்குமூலம் கொடுத்தான். போலீஸ் குற்றவாளிகளிடமிருந்து 3,00,000/- ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு நாணயங்கள், தங்கக் கட்டிகள், தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் என்று ஏகப்பட்ட பொருள்களைக் கைப்பற்றினர். விசாரணை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று வெளிநாடுகளிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நடந்தது. விசாரணை முடிந்து குற்றவாளிகளின்மீது கூட்டுச் சதி, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 263 பேர் சாட்சியம் அளித்தனர். 672 ஆதாரங்கள் குறியீடு செய்யப்பட்டன. இறுதியில் வைத்தீஸ்வரன், பார்த்தசாரதி, லஷ்மணன், கண்ணன் ஆகியோருக்குத் தூக்கு தண்டனையும்; தாவுத், அயுப்கான், மஜீத் மற்றும் கோபால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது நீதிமன்றம். குற்றவாளிகள் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால் தாவுத் மற்றும் அயுப்கானின் ஆயுள் கால தண்டனை, 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. மஜீத்தின் ஆயுள் தண்டனை 5 ஆண்டு கால சிறைத் தண்டனையாகவும், கோபாலின் ஆயுள் தண்டனை 2 ஆண்டு கால சிறை தண்டனையாகவும் குறைக்கப்பட்டது..
தூக்கு தண்டனைக் கைதிகள் இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். கருணை மனு மீது அரசாங்கம் பல வருடங்கள் ஆகியும் முடிவெடுக்காத நிலையில், தூக்கு தண்டனைக் கைதிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ரிட் மனு தாக்கல் செய்தனர். ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை அரசாங்கம் காலதாமதப்படுத்தியதால், கைதிகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்பட்டிருப்பதாகக் கூறி, இது அவர்களுடைய அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்றும் அவர்களுடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பானது..