
கீழக்கரையில் கோமான்களிடம் வசூலித்த பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி நாதியற்ற நிலையில் டப்பாவாகி நாலுமாசம் ஒர்க்ஷாப்பில் கிடக்கிறதாம், மையத்துக்கு ஆம்புலன்ஸ் இலவசம் என்ற ஸ்லோகனுடன் ஊரை வலம் வந்த இந்த வண்டிக்கு இப்போ பாடைதான் கட்ட வேண்டும், இயக்கத்தை வளர்க்கிறோம், புதுசா சங்கம் ஆரம்பிக்கிறோம் என்று காசு வசூலிப்பதிலேயே குறியாக இருக்கும் சில சமூக சேவகர்கள் இந்த ஆம்புலன்சை பராமரிக்காமல் அடுத்த ஆம்புலன்ஸ் வாங்க காசு கேட்டு ஆட்டைய போட கிளம்பிவிட்டார்கள்.
சமீபத்தில் ஜனாசாவுக்கும், சில எமர்ஜன்ஸி கேசுகளுக்கும் ஆம்புலன்ஸ் வண்டி கேட்டும் கிடைக்காமல் சடலங்கள் காத்துக்கிடந்த்தாம். பொறந்த ஊருக்கு ஏதாவது செய்யனும் என்ற சேவை நோக்கத்தில் காசை அள்ளிக் கொடுக்கும் செல்வந்தர்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த வண்டிகளை பாதுகாத்து பராமரிக்க வக்கற்று தான் சார்ந்த இயக்கத்துக்கும் சாவு மணி அடித்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது ? இந்த கடைந்தெடுத்த அயோகியத்தனதுக்கு எல்லை இல்லையா?
இனி இவர்களை நம்பி எந்த சடலமும் , எந்த அவசர கேசும் காத்துக்கிடக்கும் கூத்து அரங்கேற்றப்படக் கூடாது, கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் ஒரு ஆம்புலண்சஸ் வாங்கி மக்களின் தேவைக்கு பயன்படுத்தலாம் , அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். காசு வசூலிக்க கிளம்புவர்கள் ஆப்பு வாங்க தயாராக இருக்கட்டும்.





1 comment:
Keezhai murazu... ambulance sevai enbadhu summa aarvakolaarle aarambikkapattadhu...
ippo thaan ella amaippu yosikuraanga endaaa aarambichom
Post a Comment