வருடம் முழுதும் காய்ந்து போய்க்கிடக்கும் கீழக்கரை டிசம்பரில் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிடும், செல்வந்தர்களின் வருகை,திருமண கொண்டாட்டங்கள் என ஊரின் வடிவே மாறிவிடுவது உண்டு, திருமண விழாக்களுக்கு விஜயம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைகிறார்களோ இல்லையோ, ஊரில் கறி வியாபாரம் செய்பவர்க்ள் குதுகலிப்பின் எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள், நவம்பர் மாதமே இந்த கறிக்கடைகாரர்கள் எல்லாம் கூட்டாய் சேர்ந்து மக்களை சூறையாட தயாராகிவிடுகிறார்கள், செம்மறி ஆடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்க லாரியை அமர்த்திக்கொண்டு பன்ருட்டி, விழுப்புரம் என அலைந்து திரிய இந்த கொள்ளைக்கூட்டம் எல்லை தாண்டி ஓடுகிறது.
15 நாட்களில் 70 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் பிஸினஸ் என்றால் சும்மாவா? பக்கத்து ஊரான ஏர்வாடியில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 300 ரூபாயாக இருக்கும், இங்கு மட்டும் கிலோ 400 ருபாயாகி விலையேற்றம் ஆட்டுக் கொம்பில் போய் உட்கார்ந்து கொள்ளும், வருடம் வருடம் இந்த சூறையாடல் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு யாரை காரணம் சொல்வது? மக்களின் கழுத்தை நெறிக்கும் இவர்களுக்கு யார் சூடு போடுவது? இந்த விலையேற்ற விஷம் டிசம்பரின் பாதிப்பில் இருந்து வெளியே வர சில சமயம் ஏப்ரல், மே என்று கூட ஆகிவிடும.ஊரை சூறையாடும் இவர்களை ஒடுக்க மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள் இந்த கொள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்ப்ள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும். (மேலே கொடுக்கப்பட்ட படத்தில் இருப்பவர்களை நம் செய்தி குறிப்பிடவில்லை)





No comments:
Post a Comment